GIFT நிஃப்டி 100 புள்ளிகள் ஏற்ற-இறக்கம்; ரஷ்யா-உக்ரைன் பதட்டம்
திங்கட்கிழமை 02/06/2025 இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான புவிசார் போர் பதட்டங்கள் சந்தை உணர்வைப் பாதித்தன. நிஃப்டி சற்று மீண்டு கிட்டத்தட்ட ஏற்றம் அடைந்து முடிந்தது. வலுவான உள்நாட்டு பொருளாதார காரணிகள் மற்றும் சாத்தியமான RBI விகிதக் குறைப்புகள் மேலும் சரிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடும். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவடைந்தது. FIIகள் நிகர விற்பனையாளர்களாகவும், மற்றும் DIIகள் நிகர வாங்குபவர்களாகவும் இருந்தனர். இன்று 03/06/2025 GIFT நிஃப்டி 100 புள்ளிகள் ஏற்ற இறக்கமகா உள்ளது. எனவே இந்திய பங்கு சந்தையும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம். எனவே சந்தை கண்காணித்து பின்னர் பங்குகளை வாங்கலாம்.
0 கருத்துகள்